Viral
64 வயது பெண்ணின் காதில் 4 நாட்கள் வசித்து வந்த சிலந்தி : அதிர்ச்சி சம்பவம்!
தைவான் நாட்டை சேர்ந்த 64 வயது பெண்ணின் காதில் தொடர்ந்து நான்கு நாட்களாக வலி இருந்துள்ளது. மேலும் அசைவின் உணர்வும் இருந்ததால் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவரது காதில் 3 மில்லி மீட்டர் அளவு கொண்ட சிறிய சிலந்தி ஒன்று உயிருடன் இருந்ததைக் கண்டுப்பிடிக்கப்பட்டது. பிறகு மருத்துவர்கள் சிலந்தியை வெளியே எடுக்க முயற்சி செய்தனர்.
ஆனால் சிறிய அளவில் சிலந்தி இருந்ததால் அதை வெளியே எடுக்க முடியாமல் மருத்துவர்கள் சிரமப்பட்டுள்ளனர். பிறகு பிரத்யேக ட்யூப் மூலம் சிலந்தியை வெளியே எடுத்தனர். இதையடுத்து அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவில் 14 வயது சிறுமியின் காதில் ஜப்பானிய வண்டு ஒன்று இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து வெளியே எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!