Viral
மெஹந்தியில் QR Code.. டேக்கா கொடுக்கும் அண்ணன்களுக்கு செக் வைக்கும் தங்கைகள்.. ரக்ஷாபந்தன் சுவாரஸ்யம் !
நாடு முழுவதும் இன்று சகோதர சகோதரிகள் தினமான ரக்ஷாபந்தன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சகோதரிகள், தங்கள் சகோதரிக்கு ராக்கி என்று சொல்லக்கூடிய கயிறு ஒன்றை கட்டி விடுவர். அவ்வாறு அவர்கள் கட்டினால் எந்த காலத்திலும் சகோதரிக்கு உறுதுணையாக பக்கபலமாக இருக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம் உள்ளது.
மேலும் அவ்வாறு பூஜை செய்து, கயிறு கட்டி விடும் சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசு வழங்க வேண்டும். அதோடு அவர்கள் கேட்டதையும் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் இந்த நாளுக்காக சகோதரிகள் காத்திருப்பர். ஏனெனில் அன்று தான் தங்கள் சகோதரரின் தங்களுக்கு கேட்டதையெல்லாம் செய்வார் என்று.
சில நேரங்களில் சகோதரிகள் கேட்கும் பரிசை அவர்களால் வாங்கி தர இயலாது; அல்லது அவர்கள் வெளியே இருக்கிறது அது, இது என்று ஏதேனும் காரணத்தை சொல்லி அங்கிருந்து ஓடி விடுவர். இதனால் சகோதரிகள் பல திட்டம் தீட்டி தங்கள் சகோதரனிடம் இருந்து பரிசுகளை பெற்றுகொள்வர். எனினும் சில நேரங்களில் டேக்கா கொடுக்கும் அண்ணங்களுக்கு தற்போது செக் வைக்கும் விதமாக புதிதாக ஒன்று அறிமுகமாகியுள்ளது.
அதாவது, மெஹந்தியில் QR Code வரைந்து அதன் மூலம் அண்ணன்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் முறை. இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. "இது டிஜிட்டல் மெஹந்தி ராக்கி" என்று குறிப்பிட்டுள்ள அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது கையில் QR Code வடிவில் மெஹந்தி வரைந்துள்ளார். அதனை ஸ்கேன் செய்யும்போது, பணம் அனுப்பும் வகையில் UPI க்குள் செல்கிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளையும் பெற்று வருகிறது. மேலும் இது உண்மையா இல்லை பொய்யா என்று தெரியவில்லை. எனினும் இது போன்ற விசயங்களில் உஷாராக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!