Viral
விமானத்தில் அம்மாவுக்கு சர்ப்ரைஸ்.. 50வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட வைத்த மகன்- ஒரு நெகிழ்ச்சி கதை
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன். இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியின் மகன் மணிகண்டன்..
இந்நிலையில் தாய் கண்ணம்மாளின் 50வது பிறந்த நாளில் அவருக்கு இதுநாள் வரை கிடைக்காத ஒரு ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.
இதன்படி தாயைச் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தாய் கண்ணம்மாள் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரில் மகனைக் கட்டி தழுவியுள்ளார்.
அதோடு, விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் முன்பு தாயை கேக் வெட்டச் செய்து அவரது 50வது பறந்த நாளில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனார். பின்னர் விமானத்திலிருந்த அனைவரும் கண்ணம்மாளுக்குப் பிறந்தாள் வாழ்த்துக் கூறினர்.
இந்த மகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன் மணிகண்டனுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“சூரியன் ஒருபோதும் மறையாது திரும்ப உதித்தே தீரும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ரூ.1000 கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?” : முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்: 1.31 கோடி மகளிருக்கு அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்!
-
திராவிட மாடல் அரசின் திட்டங்களை தொடர்ந்த விஜய் : மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு!
-
“குதிரை பேரம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது” : த.வெ.க அரசு மீது பி.வில்சன் MP குற்றச்சாட்டு!