Viral
விமானத்தில் அம்மாவுக்கு சர்ப்ரைஸ்.. 50வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட வைத்த மகன்- ஒரு நெகிழ்ச்சி கதை
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன். இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியின் மகன் மணிகண்டன்..
இந்நிலையில் தாய் கண்ணம்மாளின் 50வது பிறந்த நாளில் அவருக்கு இதுநாள் வரை கிடைக்காத ஒரு ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.
இதன்படி தாயைச் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தாய் கண்ணம்மாள் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரில் மகனைக் கட்டி தழுவியுள்ளார்.
அதோடு, விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் முன்பு தாயை கேக் வெட்டச் செய்து அவரது 50வது பறந்த நாளில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனார். பின்னர் விமானத்திலிருந்த அனைவரும் கண்ணம்மாளுக்குப் பிறந்தாள் வாழ்த்துக் கூறினர்.
இந்த மகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன் மணிகண்டனுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!