Viral
விமானத்தில் அம்மாவுக்கு சர்ப்ரைஸ்.. 50வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட வைத்த மகன்- ஒரு நெகிழ்ச்சி கதை
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன். இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியின் மகன் மணிகண்டன்..
இந்நிலையில் தாய் கண்ணம்மாளின் 50வது பிறந்த நாளில் அவருக்கு இதுநாள் வரை கிடைக்காத ஒரு ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.
இதன்படி தாயைச் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தாய் கண்ணம்மாள் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரில் மகனைக் கட்டி தழுவியுள்ளார்.
அதோடு, விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் முன்பு தாயை கேக் வெட்டச் செய்து அவரது 50வது பறந்த நாளில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனார். பின்னர் விமானத்திலிருந்த அனைவரும் கண்ணம்மாளுக்குப் பிறந்தாள் வாழ்த்துக் கூறினர்.
இந்த மகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன் மணிகண்டனுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!