Viral

கணவரைப் பற்றி மலாலா போட்ட ட்வீட்.. Poll போட்டு கலாய்த்த அஸ்ஸர்.. இணையத்தில் வைரலாகும் SOCKS சம்பவம் !

பெண் குழந்தைகள் கல்விக்காகப் போராடியதற்காக மலாலா மீது தாலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் உயிர் தப்பினார். பின்னர் அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து சமூக அக்கறை, பெண்கள் நலன் என அனைத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆப்கானில் நடைபெற்ற போர் குறித்தும் மலாலா கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தும் கண்டனங்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.

தற்போது 25 வயதாகும் இவர், கடந்த 2021-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்த அஸ்ஸர் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் பிரிட்டன் பர்மிங்காமில் எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்த தகவலை மலாலா யூசுப்சாய் திருமண புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது ட்விட்டர் பதிவில், "இன்று என் வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள். அசரும் நானும் வாழ்க்கைக்குத் துணையாக இருக்க முடிவுசெய்துவிட்டோம்.

எங்கள் குடும்பத்தினருடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் எளிமையான முறையில் எங்கள் திருமணம் நடைபெற்றது" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த ட்வீட்டை அடுத்து மலாலாவை திருமணம் செய்து கொண்ட அசர் மாலிக் யார் என பலரும் இணையத்தில் தேடிப் பார்த்துள்ளனர்.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், தனது கணவரின் செயல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மலாலா பகிர்ந்துள்ளார். அதற்கு அவரது கணவரும் அந்த பதிவை குறிப்பிட்டு Polling போட்டு கிண்டலடித்துள்ளார். இவர்களது பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலாலா வெளியிட்ட அந்த பதிவில், "சோபாவில் சாக்ஸ் கிடந்தது. அஸ்ஸாரிடம் (மலாலா கணவர்), 'இது உங்களுடையதா?' எனக் கேட்டேன். அதற்கு அவர், 'ஆமாம், அது அழுக்காக இருக்கிறது. அதனால் அங்கே வைத்தேன்' என்றார். நான் அதைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் அஸ்ஸாரை டேக்கும் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டைப் பார்த்த மலாலாவின் கணவர் அஸ்ஸர் மாலிக், "சாக்ஸ் அழுக்காக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? A). வெளியில் தூக்கி எறிய வேண்டும் B). குப்பைத்தொட்டியில் போட வேண்டும்" என இரண்டு ஆப்ஷன்களை கொடுத்து Polling பதிவு ஒன்றை வெளியிட்டார். இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி அவர்களது பின் தொடர்பவர்கள் ஓட்டு போட்டனர். அதில் பெரும்பாலும், "B). குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும்" என்பதை குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியான இவர்களது இந்த பதிவு இணையத்தில் பேசு பொருளாக மாறி, இணையவாசிகள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் இணையவாசிகள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று கணவன் மனைவி தங்கள் குடும்பத்தில் நடக்கும் வேடிக்கையான நிகழ்வுகளை வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: அத்துமீறிய இளைஞர்.. சுதாரித்து கொண்ட பெண்ணின் செயலால் துண்டான இளைஞரின் உதடு.. உ.பியில் நடந்தது என்ன ?