Viral
என்னது ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள Nokia ஸ்மார்ட் போன் வெறும் ரூ.59க்கா?.. flipkart-ல் அதிரடி ஆஃபர்!
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் உள்ளது. கொரோனா வந்த பிறகு ஊரடங்கு காரணமா பள்ளி மாணவர்கள் கைகளுக்கும் ஸ்மார்ட் போன் சென்று விட்டது. போனால் நல்லது கெட்டது என இரண்டும் இருந்தாலும் இனி நம்மிடம் இருந்து பிறக்க முடியாது ஒன்றாக ஸ்மார்ட் போன் மாறிவிட்டது.
இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு போன், ஐ போன் என இரண்டு வகையான போன்களின் ஆதிக்கம் தான் உலகம் முழுவதும் உள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் தான் விலை உயர்ந்தவையாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்கள் ரூ. 10 ஆயிரத்திற்கே அனைத்து வசதிகளுடன் குறைந்த விலையில் கிடைக்கும்.
இந்நிலையில் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் அடிக்கடி புதிய புதிய ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டும். இதில் சில நேரங்களில் அதிக விலையுள்ள பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் அறிவிக்கப்படும். அந்த வகையில் தற்போது, ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள Nokia ஸ்மார்ட் போன் வெறும் ரூ.59க்கு விற்பனை பிளிப்கார்டில் அதிரடி ஆஃபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
Nokia C21 Plus ஸ்மார்ட் போன் விலை ரூ.12 ஆயிரம். ஆனால் பிளிப்கார்டில் வாங்கினால் ரூ.9,799தான். இந்நிலையில் மேலும் இந்த செல்போனுக்கு பிளிப்கார்டில் சிறப்புத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அது என்னவென்றால் பிளப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த செல்போனை வாங்கினால் ரூ.490 குறைந்து ரூ.9309க்கு கிடைக்கும்.
மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபேனை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கினால் ரூ.9250 தள்ளுபடி செய்து ரூ.59க்கு மட்டுமே செல்போன் கிடைக்கும். ஆனால் இந்த சிறப்புத் தள்ளுபடிக்கு எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் செல்போனின் மாடல் லேட்டஸ்ட் மாடலாக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
-
“மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை: தொடர் சித்திரவதை.. முறிந்த விலா எழும்பு.. Post Mortem அறிக்கை சொல்வது?
-
இது சமூக அநீதி இல்லையா? மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா?: தவெக அரசுக்கு தீபக் கேள்வி