Viral
"நாம் அமைதியாக வாழக் காரணம் பெரியார், அம்பேத்கர்"- வர்ணாசிரமத்துக்கு எதிராக 6-ம் வகுப்பு மாணவியின் பதில்!
இந்தியாவில் பல ஆண்டுகளாக தீண்டாமை கொடுமை இருந்துவருகிறது. அதன் உச்சமாக வர்ணாசிரமம் இருந்து வருகிறது. பிறப்பை வைத்து மனிதரை பிரிக்கும் வர்ணாசிரம கொள்கை சாதியின் ஆணிவேராக பல ஆண்டுகள் திகழ்கிறது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்துத்துவவாதிகள் வர்ணாசிரம கொள்கையை ஆதரித்து வருகின்றனர்.
அதன் உச்சகட்டமாக அது பாடத்திட்டத்தில் இருந்துவருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அது இருந்து வருகிறது. இந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு தமிழக மாணவி அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் பரவும் அந்த புகைப்படத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் தமிழக சிறுமி ஒருவர் வர்ணாசிரமம் குறித்த கேள்விக்கு பாடத்தில் இருப்பதை போல பதிலளித்து அதில் இறுதியாக பெரியாரும் அம்பேத்கரும் இந்த சாதிய முறைக்கு எதிராக போராடினர் என்றும், இந்த வர்ணாசிரமத்தை போதிக்கும் மனுஷ்மிருதியை அம்பேத்கர் எரித்தார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த இரண்டு தலைவர்களால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும், இந்தியா வேற்றுமையில் ஒருமையாக இருக்க காரணம் இவர்கள்தான் என்றும் கூறியுள்ளார். இது எல்லாவற்றுக்கும் மேலாக மாணவியின் இந்த பதிலுக்கு அதை திருத்திய ஆசிரியர் GOOD என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் என்னதான் பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம், சனாதனத்தை திணித்தாலும் உண்மையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழும் மண் இது என்பதும், பெரியாரின் சமூகநீதி கருத்துக்களால் பண்படுத்தப்பட்ட மண் தமிழ்நாடு என்பதும் இந்த மாணவியின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!