Viral
"நாம் அமைதியாக வாழக் காரணம் பெரியார், அம்பேத்கர்"- வர்ணாசிரமத்துக்கு எதிராக 6-ம் வகுப்பு மாணவியின் பதில்!
இந்தியாவில் பல ஆண்டுகளாக தீண்டாமை கொடுமை இருந்துவருகிறது. அதன் உச்சமாக வர்ணாசிரமம் இருந்து வருகிறது. பிறப்பை வைத்து மனிதரை பிரிக்கும் வர்ணாசிரம கொள்கை சாதியின் ஆணிவேராக பல ஆண்டுகள் திகழ்கிறது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்துத்துவவாதிகள் வர்ணாசிரம கொள்கையை ஆதரித்து வருகின்றனர்.
அதன் உச்சகட்டமாக அது பாடத்திட்டத்தில் இருந்துவருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அது இருந்து வருகிறது. இந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு தமிழக மாணவி அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் பரவும் அந்த புகைப்படத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் தமிழக சிறுமி ஒருவர் வர்ணாசிரமம் குறித்த கேள்விக்கு பாடத்தில் இருப்பதை போல பதிலளித்து அதில் இறுதியாக பெரியாரும் அம்பேத்கரும் இந்த சாதிய முறைக்கு எதிராக போராடினர் என்றும், இந்த வர்ணாசிரமத்தை போதிக்கும் மனுஷ்மிருதியை அம்பேத்கர் எரித்தார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த இரண்டு தலைவர்களால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும், இந்தியா வேற்றுமையில் ஒருமையாக இருக்க காரணம் இவர்கள்தான் என்றும் கூறியுள்ளார். இது எல்லாவற்றுக்கும் மேலாக மாணவியின் இந்த பதிலுக்கு அதை திருத்திய ஆசிரியர் GOOD என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் என்னதான் பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம், சனாதனத்தை திணித்தாலும் உண்மையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழும் மண் இது என்பதும், பெரியாரின் சமூகநீதி கருத்துக்களால் பண்படுத்தப்பட்ட மண் தமிழ்நாடு என்பதும் இந்த மாணவியின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!