Viral
"நாம் அமைதியாக வாழக் காரணம் பெரியார், அம்பேத்கர்"- வர்ணாசிரமத்துக்கு எதிராக 6-ம் வகுப்பு மாணவியின் பதில்!
இந்தியாவில் பல ஆண்டுகளாக தீண்டாமை கொடுமை இருந்துவருகிறது. அதன் உச்சமாக வர்ணாசிரமம் இருந்து வருகிறது. பிறப்பை வைத்து மனிதரை பிரிக்கும் வர்ணாசிரம கொள்கை சாதியின் ஆணிவேராக பல ஆண்டுகள் திகழ்கிறது. இந்திய சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்துத்துவவாதிகள் வர்ணாசிரம கொள்கையை ஆதரித்து வருகின்றனர்.
அதன் உச்சகட்டமாக அது பாடத்திட்டத்தில் இருந்துவருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அது இருந்து வருகிறது. இந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு தமிழக மாணவி அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் பரவும் அந்த புகைப்படத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் தமிழக சிறுமி ஒருவர் வர்ணாசிரமம் குறித்த கேள்விக்கு பாடத்தில் இருப்பதை போல பதிலளித்து அதில் இறுதியாக பெரியாரும் அம்பேத்கரும் இந்த சாதிய முறைக்கு எதிராக போராடினர் என்றும், இந்த வர்ணாசிரமத்தை போதிக்கும் மனுஷ்மிருதியை அம்பேத்கர் எரித்தார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த இரண்டு தலைவர்களால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும், இந்தியா வேற்றுமையில் ஒருமையாக இருக்க காரணம் இவர்கள்தான் என்றும் கூறியுள்ளார். இது எல்லாவற்றுக்கும் மேலாக மாணவியின் இந்த பதிலுக்கு அதை திருத்திய ஆசிரியர் GOOD என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் என்னதான் பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம், சனாதனத்தை திணித்தாலும் உண்மையை புரிந்துகொள்ளும் மக்கள் வாழும் மண் இது என்பதும், பெரியாரின் சமூகநீதி கருத்துக்களால் பண்படுத்தப்பட்ட மண் தமிழ்நாடு என்பதும் இந்த மாணவியின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!