Viral
மீண்டும் இணையத்தில் வைரலாகும் #StopHindiImposition: கம்பீரமாக ஒலித்த தமிழ்நாட்டின் குரல்: பீதியில் BJP!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அணைத்து மாநிலங்களிலும் இந்தியை எப்படியாவது திணித்து விட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பா.ஜ.க -வின் இந்த மொழி திணிப்புக்குத் தமிழ்நாடு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எப்போது எல்லாம் பா.ஜ.க இந்தித் திணிப்பை கையில் எடுக்கிறதோ எப்போது எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் துணிச்சலுடன் 'இந்தி தெரியாது போடா' என சத்தமாக முழக்கமிட்டு வருகிறார். அப்போது எல்லாம் தமிழ்நாட்டின் இந்த குரல் தான் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.
தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் 'இந்தி தெரியாது போடா' என்ற குரல் சத்தமாக ஒலித்து வருகிறது. பா.ஜ.க அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டு மக்கள் எந்த வகையிலும் உங்கள் இந்தித் திணிப்பை ஏற்க மாட்டார்கள். மீண்டும் இந்தியைத் திணிக்க முயன்றால் டெல்லி சென்று போராட்டம் நடத்துவோம். நாங்கள் எப்போதும் சொல்லும் வார்த்தை "இந்தி தெரியாது போடா" என தெரிவித்தார். இந்நிலையில் ட்விட்டரில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
Also Read
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!