Viral
வங்கிகளுக்கு அக்டோபர் 21 நாட்கள் விடுமுறை : whatsapp மூலம் பரவும் செய்தி.. உண்மை என்ன ?
அக்டோபர் மாத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீப ஒளித்திருநாள் என பண்டிகைகள் நிறைந்த மாதமாக இருக்கிறது. இதனால் விடுமுறைகள் அதிகம் உள்ளமாதமும் இந்த மாதம்தான். இந்நிலையில் வங்கிகளுக்கு அக்டோபர் 21 நாட்கள் விடுமுறை என வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்து ஒன்று பரவி வருகிறது. மேலும் இந்த செய்தியை நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையடுத்து வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என தவறான தகவல் பரவி வருகிறதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். இது குறித்துக் கூறிய வங்கி அதிகாரிகள், "வங்கிகள் விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
தமிழ்நாட்டில் அக்டோபர் மாத்தில் 4ம் தேதி சரஸ்வதி பூஜை, 5ம் தேதி விஜயதசமி, 24ம் தேதி தீப ஒளித்திருநாள் என 3 நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு பொது விடுமுறை. மேலும் 2வது, 4வது சனிக்கிழமை வழங்கம்போல் வங்கிகளுக்கு விடுமுறை. இம்மாதம் 10 நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. இதில் பொது விடுமுறை என்பது 3 நாட்கள்தான். எனவே சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கொ.ம.தே.க-விற்கு 2 சீட் ஒதுக்கீடு: கொங்கு மண்டலத்தில் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும் - ஈஸ்வரன் பேட்டி!