Viral
பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு.. இணையத்தில் வைரலாகி வரும் பகீர் வீடியோ!
மனிதர்கள் காதில் எறும்பு புகுந்துவிட்டது என்றும் சில பூச்சிகள் சென்று விட்டது என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் காதில் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது என்று நாம் இதுவரை கேள்விப் பட்டிருக்கிறோமா?. ஆனால் அப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஒரு பெண்ணின் காதில் பாம்பு ஒன்று புகுந்து, அதை மருத்துவர்கள் வெளியே எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட பெண் யார் என்றும் தெரியவில்லை.
அந்த வீடியோவில், அந்த பெண்ணின் காதில் மஞ்சல் நிறத்தில் பாம்பு தலை ஒன்று காதின் வெளியே எட்டிப்பார்க்கிறது. இதை மருத்துவர் ஒருவர் பாம்பை வெளியே எடுக்க முயல்வதுபோன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ 3 நிமிடம் 49 வினாடிகள் கொண்டதாக உள்ளது. இதை ஷில்பா ராய் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த வீடியோ உண்மையானதா என்பது இதுவரை தெரியவில்லை.
இருப்பினும் இந்த வீடியோவை பலர் பார்த்து அதிர்ச்சியடைந்து தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணை கிண்டல் செய்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!