Viral
WHATSAPP-ல் வந்த LINK.. ஒரே ஒரு கிளிக் செய்ததால் 21 லட்சத்தை இழந்த பெண்.. பின்னணி என்ன ?
நவீன உலகில் அனைத்தும் நவீனமயக்கப்பட்டதால் எந்த அளவு நல்லது இருக்கிறதோ, அதே அளவு கேட்டதும் இருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், லிங்க் அனுப்பி அதன் மூலம் மொபைல் வங்கி கணக்கு என அனைத்தும் ஹேக் செய்கின்றனர் ஹேக்கர்கள். அதே போன்றொரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்ற பகுதியை அடுத்து மதனப்பள்ளி என்ற நகரத்தை சேர்ந்தவர் வரலக்ஷி (Varalakshi). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று வரலக்ஷிக்கு வாட்சப்பில் ஒரு புது எண்ணிலிருந்து Link ஒன்று வந்துள்ளது. மேலும் அதனுடன் அதனை கிளிக் செய்யுமாறு செய்தியும் வந்துள்ளது. இதனால், அவரும் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அவர் அதனை க்ளிக் செய்த பிறகு, சில மணித்துளிகளிலே அவரது மோபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில் அவரது வங்கியிலிருந்த 21 லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறையில் இது குறித்து புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரித்த அதிகாரிகள், அந்த link ஒரு scam என்பதை கண்டறிந்தனர். மேலும் அவரது வங்கிக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், ஹேக் செய்த நபரை தேடி வருகின்றனர். அதோடு இது போன்று ஏதேனும் லிங்க் வந்து கிளிக் செய்ய சொன்னால் அதனை தெரியாமல் செய்து விட வேண்டாம் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!