Viral
பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தொடரும் வேலையில்லா திண்டாட்டம்... ‘டீ’ விற்க வந்த பட்டதாரி இளம்பெண்!
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இளம்பெண்ணான இவர் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பல இடங்களில் வேலை தேடியும் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கமால் இருந்துள்ளார். மேலும் அம்மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளையும் எழுதியுள்ளார். ஆனால் அதிலும் இடம் இடைக்காத நிலையில், வறுமை நிலைக்கு பிரியங்கா தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுயமாக தொழில் தொடங்க முடிவெடுத்த பிரியங்கா, தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரி முன்பு தேநீர் கடை ஒன்றைத் தொடங்கியுள்ளார். மேலும் அந்த தேநீர் கடையில், மசாலா டீ, சாக்லேட் டீ என பலவகையான டீ விற்பனை செய்வதால் கல்லூரி மாணவிகள் அதிகளவில் கடைக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
பா.ஜ.க கூட்டணியின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பெண்களுக்கு படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத நிலை உருவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி