Viral
பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தொடரும் வேலையில்லா திண்டாட்டம்... ‘டீ’ விற்க வந்த பட்டதாரி இளம்பெண்!
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இளம்பெண்ணான இவர் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பல இடங்களில் வேலை தேடியும் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கமால் இருந்துள்ளார். மேலும் அம்மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளையும் எழுதியுள்ளார். ஆனால் அதிலும் இடம் இடைக்காத நிலையில், வறுமை நிலைக்கு பிரியங்கா தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுயமாக தொழில் தொடங்க முடிவெடுத்த பிரியங்கா, தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரி முன்பு தேநீர் கடை ஒன்றைத் தொடங்கியுள்ளார். மேலும் அந்த தேநீர் கடையில், மசாலா டீ, சாக்லேட் டீ என பலவகையான டீ விற்பனை செய்வதால் கல்லூரி மாணவிகள் அதிகளவில் கடைக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
பா.ஜ.க கூட்டணியின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பெண்களுக்கு படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத நிலை உருவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!