Viral
மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. 26 வயதில் நேர்ந்த சோகம்!
இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா கடந்த 2014ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவர் மைக்ரோசாஃப்ட் பணிகளுக்கு இடையே, மாற்றுத்திறனாளிகள் எளிதில் கல்வி கற்கும் வகையில் பல புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சத்யா நாதெள்ளா - அனு தம்பதியின் மகன் ஜைன் நாதெள்ளா பெரும் மூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த சில வாரங்களாக நோய் பாதிப்பால், அதிகம் பாதிக்கப்பட்ட ஜைன் நாதெள்ளா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் துயரமான சூழலில் சத்யா நாதெள்ளாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும், அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!