Viral
மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. 26 வயதில் நேர்ந்த சோகம்!
இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா கடந்த 2014ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவர் மைக்ரோசாஃப்ட் பணிகளுக்கு இடையே, மாற்றுத்திறனாளிகள் எளிதில் கல்வி கற்கும் வகையில் பல புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சத்யா நாதெள்ளா - அனு தம்பதியின் மகன் ஜைன் நாதெள்ளா பெரும் மூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த சில வாரங்களாக நோய் பாதிப்பால், அதிகம் பாதிக்கப்பட்ட ஜைன் நாதெள்ளா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் துயரமான சூழலில் சத்யா நாதெள்ளாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும், அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
Also Read
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே
-
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!