Viral
“இனி பானிபூரி சாப்பிடும் போதெல்லாம் இதானே ஞாபகம் வரும்” : வைரல் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி!
பரத் நடித்த ‘காதல்’ திரைப்படத்தில் ஒருவர், தனது முதலாளியின் நண்பர் மேல் உள்ள கோபத்தில் குளிர்பானத்தில் சிறுநீர் கழித்து அவருக்குக் குடிப்பதற்குக் கொடுப்பார்.
அதைக் கண்டுபிடித்த முதலாளியின் நண்பர் அவரை பின்னி பெடலெடுத்திருப்பார். கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சம்பவம் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் அரங்கேறியிருக்கிறது.
சாலையோர கடைகளுக்கு என்றுமே மவுசு குறைந்ததில்லை . சிலர் ருசிக்காகவும் சிலர் குறைவான விலை என்பதாலும் சாலையோரக் கடைகளில் சாப்பிடுவார்கள். ஆனால் சுகாதாரத்தை யார் பார்க்கிறார்கள் என்றால் அது கேள்விக்குறியே.
இந்நிலையில், சாலையோரத்தில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் ஒருவர் தனது சிறுநீரை பானி (நீர்) உள்ள பக்கெட்டில் கலக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவை பதிவிட்டவர், “தனது சிறுநீரை பானிபூரிக்கு வைக்கும் ரசத்தில் கலக்கிறார் கடை உரிமையாளர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை போலிஸார் கைது செய்துள்ளனர். யார் மேல் உள்ள கோபத்தில் அவர் இப்படி செய்தார் என்றுதான் தெரியவில்லை.
- உதயா
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!