Viral
கிலோ வெங்காயம் ரூ.100 : மண மக்களுக்கு பரிசாக வெங்காயம் கொடுத்த நண்பர்கள் - ட்ரெண்ட் ஆகும் புது பரிசு !
இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு மழைப்பொழிவால் விளைச்சல் குறைந்தது.
வெங்காய உற்பத்தி குறைந்ததால் மற்ற மாநிலங்களுக்கான வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆகையால், வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்ததால் இல்லத்தரசிகளின் கண்களில் வெங்காயத்தை உரிப்பதற்கு முன்பே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் பாகல்கோட்டை பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில், மணமக்களுக்கு ஒரு பெட்டியில் வெங்காயத்தை வைத்து நண்பர்கள் பரிசாக அளித்துள்ளனர். அந்த வெங்காய பரிசுடன் மணமக்களும், நண்பர்களும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
Also Read: ’மொபைல் போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ : பட்டுக்கோட்டை மொபைல் கடையில் அதிரடி சலுகை !
அதேபோல, தமிழகத்தின் கடலூர் மஞ்ச குப்பம் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் ஷாகுல்-சப்ரீனா என்ற மணமக்களுக்கு நண்பர்கள் அனைவரும் வெங்காயத்தை பரிசாக கொடுத்துள்ளனர். இது அங்குள்ளவர்களை சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதே நிலமை தொடர்ந்தால் வெங்காயத்தை வெறும் கண்ணால் மட்டுமே காணமுடியும் அளவுக்கு வந்துவிடும் என இந்த புகைப்படங்களை காண்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பெட்ரோல், டீசல் விலையேற்றத்தின் போதும் இது போன்று மணமக்களுக்கு நண்பர்கள் லிட்டர் கணக்கில் பெட்ரோலை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
இவை ஒருபக்கம் கிண்டலுக்கு உரியதாக இருந்தாலும், நாட்டு நடப்பை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாவார்கள். ஆனால், அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காத்து வருகிறது.
Also Read
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!