Viral
உண்மையைச் சொல்லி லீவ் கேட்ட மாணவனுக்கு குவியும் பாராட்டுகள்!
கபடி போட்டியை காணச் சென்றதால் வகுப்புக்கு வரவில்லை என உண்மையான காரணத்தைச் சொல்லி மாணவன் ஒருவன் விடுப்பு கேட்ட சுவாரஸ்யமான சம்பவம் திருவாரூரில் நடந்துள்ளது.
திருவாரூர் மேலராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் ஆசிரியர் மணிமாறன், மாணவர்கள் நேரடியாகச் சொல்லமுடியாத கருத்துகளை தெரிவிப்பதற்கு கருத்து சுதந்திரம் என்ற பெட்டியை பள்ளியில் வைத்துள்ளார்.
அவற்றில் எழுதப்பட்டுள்ள கடிதங்களைக்கொண்டு மாணவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளார் ஆசிரியர் மணிமாறன். இந்நிலையில், அவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் தீபக் என்ற மாணவன் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறான்.
அதில், தனது ஊரில் நடைபெற்ற கபடி போட்டியை பார்த்ததால் உடல் சோர்வாக இருப்பதாகவும், அதனால் விடுமுறை அளிக்குமாறு கடிதத்தைல் குறிப்பிட்டிருந்தார்.
இதனை படித்த ஆசிரியர் மணிமாறன், மாணவனின் நேர்மையை கண்டு வியந்து அவருக்கு விடுப்பும் அளித்துள்ளார். மேலும், மாணவன் தீபக்கின் விடுமுறை கடிதமும் சமூக வலைதளத்தில் வைரலாகி அவருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!