Viral
''தங்கம் விலைக்கு தக்காளி விக்குதுன்னு பேச்சுக்கு சொல்வாங்க'' : அதுக்குன்னு இப்படியா!
பருவம் தவறி பெய்த மழையால் பாகிஸ்தானில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தக்காளி பற்றாக்குறையின் காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் தற்போது தக்காளியின் கிலோ 320 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அதனால், அரசு மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவிவருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த ஈரான் நாட்டில் இருந்து தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை இறக்குமதி செய்து வருகிறது. பாகிஸ்தானில் தக்காளியைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் காவலர்களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு கை, கழுத்து, தலை என அத்தனை இடங்களிலும் தங்கத்திற்கு பதில் தக்காளியை ஆபரணங்களாக அணிந்து இருந்தார். மேலும், அவருடைய பெற்றோர் திருமணத்துக்கு பரிசாக மூன்று கூடை தக்காளியை பரிசளித்துள்ளனர்.
இதுகுறித்து மணப்பெண் கூறுகையில் , தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. அதேபோல் தற்போது, தக்காளியின் விலையும் அதிகமாக உள்ளது. அதனால்தான் தங்கத்திற்கு பதிலாக தக்காளியை அணிந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
இதனை உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக்கியது. அதனையடுத்து, இந்த நிகழ்வு உலகளவில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”