Viral
''தங்கம் விலைக்கு தக்காளி விக்குதுன்னு பேச்சுக்கு சொல்வாங்க'' : அதுக்குன்னு இப்படியா!
பருவம் தவறி பெய்த மழையால் பாகிஸ்தானில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தக்காளி பற்றாக்குறையின் காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் தற்போது தக்காளியின் கிலோ 320 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அதனால், அரசு மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவிவருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த ஈரான் நாட்டில் இருந்து தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை இறக்குமதி செய்து வருகிறது. பாகிஸ்தானில் தக்காளியைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் காவலர்களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு கை, கழுத்து, தலை என அத்தனை இடங்களிலும் தங்கத்திற்கு பதில் தக்காளியை ஆபரணங்களாக அணிந்து இருந்தார். மேலும், அவருடைய பெற்றோர் திருமணத்துக்கு பரிசாக மூன்று கூடை தக்காளியை பரிசளித்துள்ளனர்.
இதுகுறித்து மணப்பெண் கூறுகையில் , தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. அதேபோல் தற்போது, தக்காளியின் விலையும் அதிகமாக உள்ளது. அதனால்தான் தங்கத்திற்கு பதிலாக தக்காளியை அணிந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
இதனை உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக்கியது. அதனையடுத்து, இந்த நிகழ்வு உலகளவில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!