Viral
காளை மாடு போடும் சாணத்தை பிடிக்க ஆவலோடு காத்திருக்கும் வட இந்தியக் குடும்பம் - இப்படியும் ஒரு காரணமா ?
ஹரியானா மாநிலம் கலன்வாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜனக்ராஜ். வியாபாரியான இவர் வீட்டில் இருந்த 40 கிராம் தங்க நகைகளை கழற்றி டப்பா ஒன்றில் வைத்திருக்கிறார்.
டப்பாவில் தங்க நகைகள் இருப்பதை அறியாத வீட்டில் உள்ள மற்றவர்கள், காய்கறி கழிவுகளுடன் அதனை வீட்டுக்கு வெளியே வீசி இருக்கின்றனர். அந்த காய்கறி கழிவுகளை அங்கே சுற்றி திரிந்த காளை மாடு ஒன்று சாப்பிட்டுள்ளது.
இது தெரியாமல் வீட்டில் உள்ள ஒருவர் தான் நகைகளை திருடி இருக்க வேண்டும் என நினைத்த ஜனக்ராஜ் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போதுதான், நகைகளை காய்கறி கழிவுகளுடன் தூக்கிப்போட்டதும், அதனை காளை மாடு சாப்பிட்டதும் தெரிய வந்துள்ளது. இதனால், பதற்றமடைந்த குடும்பத்தினர் அந்த காளை மாட்டினை தேடியுள்ளனர்.
5 மணி நேர தேடுதலுக்கு பின்னர் மாட்டை தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு கொண்டு வந்தனர். மேலும், மாடு சாணம் போட்டால் அதனுடன் நகைகளும் வந்து விடும் என்பதால், அதிக உணவுகளை கொடுத்து சாணம் போடுவதற்காக காத்திருக்கின்றனர்.
காளை மாடு ஒன்று சாணம் போடுவதற்காக ஒரு குடும்பமே காத்திருக்கும் சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுவரை அந்த மாடு சாணம் போடாமல் இருப்பதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!