Viral
காரில் போனாலும் ஹெல்மெட் போட வேண்டுமா? - பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் நடக்கும் கூத்தை பாருங்க!
பா.ஜ.க.ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தினந்தோறும் கூத்துக்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5 ந் தேதி முதல் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மூன்று முறை செல்பி எடுத்து அனுப்பவேண்டும் என்ற விநோத உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது.
இந்த காமெடிச் செய்தி காலாவதி ஆவதற்குள் மற்றொரு புகைப்படம் ஒன்று அம்மாநிலத்தில் இருங்து வெளியாகி வைரலாகி வருகிறது.
உ.பி மாநிலம் அலிஹ்ராவை சேர்ந்தவர் பியூஷ் வர்ஷ்னே. இவர் கடந்த ஆக., 27ம் தேதி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணியவில்லை என இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு மின்னணு ரசீது அனுப்பப்பட்டது.
மின்னணு ரசீது என்பது குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்பீடு கேமரா அல்லது சாதரண கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து போலீசார் தரப்பில் விதிகளை மீறிய வாகனங்களுக்குத் தானாக எலக்ட்ரானிக் முறையில் அபராதம் விதிப்பதாகும்.
அப்படியாக இவருக்கு ஏதோ தவறு காரணமாக காரில் சென்ற இவருக்கு ஹெல்மெட் போடவில்லை என மின்னணு அபராத ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பார்த்துப் பயந்த இவர் உடனடியாக போலீசில் இது குறித்துச் சொல்லியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் காரில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து பியூஷ் கூறுகையில், "எனக்கு இ- செல்லான் வந்ததிலிருந்து பயமாக இருக்கிறது. தற்போது அபராத தொகை வேறு அதிகமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. போலீசார் கூறியது போல் இப்படியாகத் தெரியாமல் என் மீது அபராதம் விழுந்தாலும் அதைப் பார்த்தால் எனக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் எந்த பிரச்னையும் வேண்டாம் என காரிலும் ஹெல்மெட் போடும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டேன்." எனக்கூறினார்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறும் போது, "அவருக்குத் தெரியாமல் ஏதோ பிழை காரணமாக இந்த செல்லான் போடப்பட்டிருக்கலாம். இது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். அவர் காரில் சென்றது உறுதிசெய்யப்பட்டால் அந்த செல்லான் ரத்து செய்யப்படும். " என கூறினார்.
நாடு முழுவதும் அதிக அபராத தொகை காரணமாக மக்கள் மத்தியில் கடும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காரில் சென்றவருக்கு ஹெல்மெட் போடவில்லை என விதிக்கப்பட்ட அபராதத்தால் அவர் காரில் செல்லும் போதும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும் சம்பவமும், இதுதொடர்பான புகைப்படமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!