Viral
பாகிஸ்தான் போலிஸ் அதிகாரியாக முதல் சிறுபான்மையினர் இந்து பெண் தேர்வு!
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பொது சேவை ஆணையம் காவல்துறை அதிகாரிகளுக்கான தேர்வு ஒன்றை நடத்தியது. இந்த தேர்வில் இந்து மதத்தை சேர்ந்த புஃபா கோலி என்ற இளம் பெண் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் சிந்து மாகாண துணை காவல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் காவல்துறை அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண்மணி என்ற பெருமையை புஃபா கோலி பெற்றுள்ளார்.
இந்த தகவலை பாகிஸ்தானின் ஜியோஃப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம், இந்து சமூகத்தைச் சேர்ந்த சுமன் பவன் போதானி என்பவர் சிவில் மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!