Viral
பாகிஸ்தான் போலிஸ் அதிகாரியாக முதல் சிறுபான்மையினர் இந்து பெண் தேர்வு!
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பொது சேவை ஆணையம் காவல்துறை அதிகாரிகளுக்கான தேர்வு ஒன்றை நடத்தியது. இந்த தேர்வில் இந்து மதத்தை சேர்ந்த புஃபா கோலி என்ற இளம் பெண் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் சிந்து மாகாண துணை காவல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் காவல்துறை அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண்மணி என்ற பெருமையை புஃபா கோலி பெற்றுள்ளார்.
இந்த தகவலை பாகிஸ்தானின் ஜியோஃப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம், இந்து சமூகத்தைச் சேர்ந்த சுமன் பவன் போதானி என்பவர் சிவில் மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!