Viral
பா.ஜ.க ஆட்சியில் புதிய முதலீட்டாளர்கள் 87% குறைந்துவிட்டனர் : பொருளாதார மையம் தகவல்!
இந்தியாவில் புதிய முதலீடுகள், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்குப் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை, இந்திய பொருளாதார கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.
அதில், “2019 ஜூன் மாதத்தில், இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ரூ. 43 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தன. இது, முந்தைய மார்ச் வரையிலான காலாண்டோடு ஒப்பிடுகையில் 81 சதவிகிதம் குறைவு ஆகும். அதேபோல 2018 ஜூன் காலகட்டத்தை ஒப்பிட்டால், 87 சதவிகிதம் குறைவு” என்று கூறப்பட்டுள்ளது.
“திட்டங்களின் மதிப்பு உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டாலும், முதலீடு செய்வதற்கு விருப்பமற்ற மனநிலையிலேயே புதிய முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறு குறைந்த அளவிலான திட்டங்கள் அறிவிப்புக்கு, முதலீடுகள் குறைந்ததே முக்கியக் காரணம் என்றும் சொல்லலாம். இதற்கு முந்தைய காலாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு முதலீடு அளிப்பதை எடுத்துக்கொண்டாலும், 77 சதவிகிதம் குறைந்துள்ளது.
தேர்தல் காலம் என்பதாலேயே முதலீடுகள் குறைந்தது என்றால், கடந்த 2014 தேர்தல் காலத்தில் இவ்வாறு நடக்கவில்லை. அப்போது முதலீடுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது. 2004 மற்றும் 2009 தேர்தல்களின்போது முதலீடு குறைவாக இருந்தது என்றாலும், அது தற்போதைய அளவிற்கு மோசமாக இல்லை” என்றும் பொருளாதாரக் கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!