Viral
தொடரும் தீவிரவாத தாக்குதல்... இலங்கை அமைச்சரின் சகோதரர் மீது கைது நடவடிக்கை!
ஈஸ்டர் நாளான ஏப்.21 அன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 253 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் நீடித்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. மேலும், தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதையடுத்தும் நாட்டு மக்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நாட்டில் சில பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த டெட்டேனட்டர்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து பாதுகாப்பு படையினர் செயலிழக்கச் செய்தனர். இதனையடுத்து இலங்கை பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கையில் வர்த்தகத் துறை அமைச்சர் பதியூதனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தாக்குதல் குறித்து 60 பேரை புலனாய்வு அமைப்பு கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”10 வருடமாக மக்களைப் பற்றி கவலைப்படாத ஒரே பிரதமர் மோடிதான்” : பிரியங்கா காந்தி பேச்சு!
-
”பிரதமர் மோடி ஒரு பொய்யர் என்பதை நாடு நன்றாக அறிந்து விட்டது ” : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!
-
”இந்து - முஸ்லிம் பிரிவினை விளையாட்டு விளையாடும் மோடி” : ப.சிதம்பரம் கடும் தாக்கு!
-
“நிவேதாவின் முயற்சிகளுக்கு அரசு உடன் நிற்கும்” : திருநங்கை மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்!
-
இந்துக்களுக்காக கண்ணீர் விடும் பாஜக 10 ஆண்டு காலத்தில் இந்துக்களுக்காகச் செய்தது என்ன? : முரசொலி கேள்வி!