Viral
இலங்கை தொடர் தாக்குதல் எதிரொலி : தமிழகம் முழுவதும் தீவிர சோதனை!
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அதன்பிறகு இலங்கையில் ஆங்காங்கே குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாலும், பல இடங்களில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாலும் அந்நாட்டில் பதற்றம் ஓயவில்லை.
இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக தமிழகம் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், தமிழகத்தின் பிரதான தேவாலயங்களான வேளாங்கண்ணி, தூத்துக்குடி போன்ற பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும் இந்திய கப்பல் படை, கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!