Viral
இலங்கையில் தொடரும் பதற்றம்... மீண்டும் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு!
ஈஸ்டர் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 359 பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கோர சம்பவத்திற்குப் பிறகு இலங்கையில் ஆங்காங்கே குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டார் அந்நாட்டு அதிபர் சிறிசேன.
இதற்கிடையில் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. மேலும் இது நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை கொழும்புவின் புகோடாவில் உள்ள நீதிமன்றத்திற்கு அருகே சிறிய அளவில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறு இருக்கையில், இன்று பிற்பகல் நுவேரியாவில் உள்ள ஹவேலி என்ற பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
Also Read
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?