Viral
“கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கை குண்டு வெடிப்பு” - இலங்கை அமைச்சர்
இலங்கையில் 321 பேரை பலிகொண்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம், நியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்க நடத்தப்பட்டது என இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ருவான் விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.
மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், அங்குள்ள இரண்டு மசூதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அதில், 50 இஸ்லாமியர்கள் பலியாகினர்.
கிறிஸ்ட்சர்ச்சில் இஸ்லமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது, என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக, விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.
இலங்கை தாக்குதல் சம்பவத்தில் தேசிய தவ்ஹித் ஜமாஅத் என்ற அமைப்பின் சதி வேலை இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்றுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தனது செய்தி பிரிவான ‘Amaq’ மூலம் தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் இன்னும் முழுமையான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!