Viral
டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
டிக் டாக் எனும் சமூக வலைதள செயலி மூலம் பலர் வீடியோக்களை வெளியிட்டு பொழுதுபோக்காகவும், தங்களது திறமைகளை வெளிகாட்டியும் வருகின்றனர்.
அதே வேளையில் குழந்தைகள், பெண்கள் உபயோக்கிம் இந்த செயலியில் சில ஆபாச பதிவுகளும் இடம் பெறுகிறது என புகார் எழுந்துள்ளது.
டிக் டாக் செயலியால் சமூகத்தில் கலாசார சீரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி, இதனை தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து சீனாவைச் சேர்ந்த டிக் டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம்,
உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்க மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ம் தேதி ஒத்திவைத்தது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!