Viral
டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
டிக் டாக் எனும் சமூக வலைதள செயலி மூலம் பலர் வீடியோக்களை வெளியிட்டு பொழுதுபோக்காகவும், தங்களது திறமைகளை வெளிகாட்டியும் வருகின்றனர்.
அதே வேளையில் குழந்தைகள், பெண்கள் உபயோக்கிம் இந்த செயலியில் சில ஆபாச பதிவுகளும் இடம் பெறுகிறது என புகார் எழுந்துள்ளது.
டிக் டாக் செயலியால் சமூகத்தில் கலாசார சீரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி, இதனை தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து சீனாவைச் சேர்ந்த டிக் டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம்,
உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்க மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ம் தேதி ஒத்திவைத்தது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !