Tamilnadu
“பத்திரிக்கைகளைப் பற்றி இப்படிப் பேசக் கூடாது” : பேரவையில் தவெக அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின், த.வெ.க. ஆட்சி வந்த பிறகு தமிழ்நாட்டின் முதலீடுகளும் பொருளாதாரமும் குறைந்து வருவதாகப் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ”காசு கொடுத்தால் பத்திரிக்கைகள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள்” என ஒட்டுமொத்தப் பத்திரிகைகளையும் விமர்சிக்கும் வகையில் பேசினார்.
உடனே இதில் தலையிட்ட தி.மு.க. கொறடா எ.வ. வேலு, "ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை, தொலைக்காட்சி. அதனைக் கொச்சைப்படுத்தக் கூடாது. பணம் அளித்தால் எதை வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்கள் எழுதிவிடுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது," எனப் பதிலடி கொடுத்தார்.
பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "பொத்தாம் பொதுவாகப் பத்திரிக்கைகள் காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என்று அவையில் அமைச்சர் பேசக் கூடாது. காசு வாங்கிக்கொண்டு என்று பேசுவது ஒட்டுமொத்தப் பத்திரிக்கைகளையும் அவமதிப்பதாகும்," என அறிவுரை வழங்கினார்.
Also Read
-
பரந்தூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? – பேரவையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
-
“தமிழர்கள் படுகொ* செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது; த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா?” : உதயநிதி கேள்வி!
-
“அருமை நண்பர் கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு : தி.மு.க ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம் என்ன?
-
முதலமைச்சர் ஆனாலும், தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை சொல்லிவிட்டார் விஜய்! : முரசொலி தலையங்கம்!