Tamilnadu
தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாட்டில் த.வெ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்த காவல் மரணங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4-க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நடந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் சபரிவர்மன், தூத்துக்குடியில் அருணாச்சலம், சென்னை புழல் சிறையில் பாலாஜி அதேபோல் வெங்கடேசன் ஆகியோர் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த விவகாரங்களில் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ” தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
விஜய்க்கு ‘ஜனநாயகன்’ என்ற பெயர் ஒரு கேடா? கேவலம்! மகா கேவலம்! : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
‘இந்தியாவில் ஆஷஸ் டெஸ்ட்?.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி!’
-
‘CJP கட்சியினருடன் 2-கட்ட பேச்சு வார்த்தை.. அவகாசம் கேட்ட ஒன்றிய அரசு.. நாளை முக்கிய முடிவு!’
-
பா.ஜ.க ஆட்சிக்குக் காட்டும் விசுவாசமா இது? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி!
-
“நீட் தேர்வை எதிர்த்து போராடும் மாணவர்களின் கையையும் காலையும் உடைக்கும் விஜய்” : முரசொலி ஆவேசம்!