Tamilnadu
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்துள்ள மஞ்சகரணையில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழலில் இங்கு இன்று (ஜூன் 21) திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வாயு கசிந்த காற்றை சுவாசித்ததால் முச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு வாய், மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரத்தம் கசிந்தது. தொடர்ந்து இந்த தொழிற்சாலையில், இருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்தினரு 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வரை இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், சுகாதாரத்துறை அருண்ராஜ் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறினார்.
அதோடு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!