Tamilnadu
ஆந்திராவிற்கு சென்ற 2 பெரு முதலீடுகள் : வாய் திறக்காத த.வெ.க. அரசு!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவியேற்று 5 நாட்களில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 15 ஆயிரத்து 803 கோடி மதிப்புள்ள மெகா திட்டம் கைமாறி ஆந்திரா வசம் சென்று விட்டது.
தி.மு.க அரசால் பெரும் சவாலுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட 15 ஆயிரத்து 803 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட இருந்து மேம்படுத்தப்பட்ட நடுத்தர போர் விமான தயாரிப்பு திட்டம் ஆந்திராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதிய பாதுகாப்பு கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்காக, மசகான் கப்பல் கட்டும் தளம் 2025 செப்டம்பரில் திராவிட மாடல் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், தற்போது அந்நிறுவனமும் ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய இந்த இரண்டு மெகா முதலீடுகளும் ஆந்திராவிற்கு சென்றது குறித்து முதலமைச்சர் விஜய் இதுவரை கேள்வி கேட்காதது ஏன் என அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொழில்துறை அமைச்சராக உள்ள கீர்த்தனாவும் இதுகுறித்து வாய் திறக்காதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?
-
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!