Tamilnadu
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
வேலூர் மாவட்டம், கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகிய ஐந்து பேரும் அதே கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கணியம்பாடி தவெக ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரும் சம்பந்தப்பட்ட செங்கல் சூளைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, "நாங்கள்தான் ஆளுங்கட்சி; இனிமேல் கணியம்பாடி பகுதிகளில் செங்கல் சூளை நடத்த வேண்டுமென்றால் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்" என்று அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்துக் கேள்வி கேட்டபோது, உரிமையாளர்கள் ஐந்து பேரையும் கடும் சொற்களால் திட்டி, தவெக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், இது குறித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!
-
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டி கொலை : கம்மல் கொள்ளை - நாகர்கோவில் அருகே கொடூரம்!
-
“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!