Tamilnadu
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
வேலூர் மாவட்டம், கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகிய ஐந்து பேரும் அதே கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கணியம்பாடி தவெக ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரும் சம்பந்தப்பட்ட செங்கல் சூளைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, "நாங்கள்தான் ஆளுங்கட்சி; இனிமேல் கணியம்பாடி பகுதிகளில் செங்கல் சூளை நடத்த வேண்டுமென்றால் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்" என்று அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்துக் கேள்வி கேட்டபோது, உரிமையாளர்கள் ஐந்து பேரையும் கடும் சொற்களால் திட்டி, தவெக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், இது குறித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!