Tamilnadu
சேலம் தெற்கு அதிமுக வேட்பாளருக்குப் பொதுமக்கள் எதிர்ப்பு : பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே அதிர்ச்சி!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோத், தொகுதிக்குட்பட்ட 49-வது வார்டு பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை வழிமறித்த அப்பகுதி பொதுமக்கள், அ.தி.மு.க-வினருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே மாறி மாறி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இருப்பினும், தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவில்லை என்றும், மக்களைப் பற்றி எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
"எங்கள் பகுதிக்கு எந்த உதவியும் செய்யாத உங்களுக்கு, இங்கு வந்து வாக்கு கேட்க எந்த உரிமையும் இல்லை; உடனடியாகப் பகுதியை விட்டு வெளியேறுங்கள்" எனப் பொதுமக்கள் முழக்கமிட்டனர். மேலும், இந்த முறை நிச்சயம் அ.தி.மு.க-விற்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.
அ.தி.மு.க வேட்பாளரை மக்கள் முற்றுகையிட்டு ஆவேசமாகப் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே, அக்கட்சி வேட்பாளருக்குப் பொதுமக்கள் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!