Tamilnadu
தேர்தலுக்கு தயாராகும் களம்! - ஏப்.3 அன்று திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக தொடங்கியுள்ளதையொட்டி, வருகிற ஏப்.3 அன்று தி.மு.கழக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வழியாக கலந்துரையாடுகிறார் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இது குறித்து தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு,
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து தொகுதிகளிலும் உள்ள கழக நிர்வாகிகளுடன் 03.04.2026 (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.
அதுபோது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியளவிலும் ஓரிடத்தில் தக்க ஏற்பாடுகளைச் செய்யும்படி மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், பகுதி – நகரம் – ஒன்றியம் - வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கான கேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
காணொலி இணைப்பு தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!