Tamilnadu
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி தொழிலாளர் ஓய்வு இல்லங்களை திறந்து வைத்த அமைச்சர் சி.வி.கணேசன்!
தொழிலாளர்களுக்கு ஓய்வு இல்லங்களை தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் திறந்து வைத்தார்.
தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தங்குவதற்காக சுற்றுலா தலங்களான குற்றாலம், மாமல்லபுரம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் விடுமுறை இல்லங்களும், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சென்னையில் தங்குவதற்காக ஜீவா இல்லம் ஆகியவை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின்கீழ் செயல்படுகிறது.
அமைப்புசார் தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் தங்குவதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில், சிங்காரவேலர் ஓய்வு இல்லத்தினை ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடத்தை 25.08.2025 அன்று திறந்து வைத்தார்கள்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள், தென்காசி மாவட்டம், குற்றாலத்தில், திரு.வி.க. ஓய்வு இல்லத்தினை ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை 18.12.2024 அன்று திறந்து வைத்தார்கள்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள், சட்டமன்றப் பேரவை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் சென்னை, ஜீவா இல்லம் மற்றும் மாமல்லபுரம், ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் புதுப்பிக்கப்படும் என அறிவித்தார்.
இன்று 07.03.2026 சென்னையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்குவதற்காக ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை, ஜீவா இல்ல கட்டடத்தையும், மாமல்லபுரத்தில், அமைப்புசார் தொழிலாளர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் தங்குவதற்காக ரூ.3.01 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மாமல்லபுரம், ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் ஆகியவற்றை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி.கணேசன் அவர்கள் திறந்து வைத்தார்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!