Tamilnadu
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 6) நிறைவடைந்தது.
தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட கடந்த பிப்.20 அன்று தொடங்கி இன்று (மார்ச் 6) வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் வரலாறு காணாத வகையில் கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் 15,372 விருப்ப மனுக்களை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
“வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கழகத்தின் திராவிட மாடல் 2.O ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கழகத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டியது, தேர்தல் பணிகளை மெருகூட்டியுள்ளது” என தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!