Tamilnadu
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 6) நிறைவடைந்தது.
தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட கடந்த பிப்.20 அன்று தொடங்கி இன்று (மார்ச் 6) வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் வரலாறு காணாத வகையில் கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் 15,372 விருப்ப மனுக்களை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
“வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கழகத்தின் திராவிட மாடல் 2.O ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கழகத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டியது, தேர்தல் பணிகளை மெருகூட்டியுள்ளது” என தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!