Tamilnadu
”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” : கலைஞர் பாணியில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் CNN-News 18 சார்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். மேலும் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
அப்போது, திராவிட மாடல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு "மதச்சார்பின்மை, சோசலிசத்தின் கொள்கைகளை கொண்டு பாசிசத்தை எதிர்ப்பது தான் திராவிட மாடல். இதைவிடத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் திராவிட மாடல்” என பதில் அளித்தார்.
மேலும், பலமுனைப் போட்டி குறித்த கேள்விக்கு ”பலமுனைப் போட்டி இருக்கலாம். ஆனால், இது பலம் பொருந்திய போட்டியாக இல்லை.” என கூறினார். அதேபோல் ”பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்குப் பெரிய பிரச்சாரம்தான்.” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, தேசிய தலைவர் என்ற கருத்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறதே என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு ”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
Also Read
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!