Tamilnadu
“இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்த சென்னை மாநகராட்சி” : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகள் பல ஆண்டுகளாக பெருங்குடி, கொடுங்கையூர் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதை, உணர்ந்த சென்னை மாநகராட்சி பயோ மைனிங் முறையில் குப்பைகளை தரம் பிரித்து நிலத்தை மீட்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கொடுங்கையூரில் ரூ.641 கோடியில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது, 50 ஆண்டுகாலமாகச் சேர்ந்திருந்த 1.7 மில்லியன் கன மீட்டர் (சுமார் 26.35 லட்சம் மெட்ரிக் டன்) பழைய கழிவுகள் பயோ-மைனிங் தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாகச் சுத்திகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 225 ஏக்கர் பரப்பளவிலான கிடங்கில் இதுவரை சுமார் 94 முதல் 96 ஏக்கர் நிலம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நிலத்தில் பயோ-சிஎன்ஜி (Bio-CNG) பிளாண்ட், உரத் தயாரிப்பு மையங்கள் மற்றும் பசுமைப் பூங்காக்கள் அமைக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சென்னை மாநகராட்சியின் பயோ-மைனிங் முறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”50 ஆண்டுகளாக மலைபோல் குவிந்து கிடந்த பெருங்குடி குப்பைக் கிடங்கை, பயோ-மைனிங் (Bio-mining) தொழில்நுட்பம் மூலம் சென்னை மாநகராட்சி வெற்றிகரமாகச் சுத்தப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்தக் கழிவுப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை பிறக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளைப் பயோ-மைனிங் (Bio-mining) செயல்முறை மூலம் சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. மீதமுள்ள கழிவுகளை 2027-க்குள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மை தீர்வுகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!