Tamilnadu
”எங்கள் வெற்றியைத் தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
"தேர்தல் நெருங்க நெருங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா பந்துகளையும் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவும் 6 பந்துகள் போட வேண்டிய இடத்தில் 8, 10 என்று நோபால் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எங்கள் வெற்றியைத் தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது." என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி," திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பிரச்சனையாக்குகிறார்கள், நாளை திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவதையும் பிரச்சனையாக்குவார்கள். தீபம் எங்கு ஏற்றுவது என்பது இந்து சமய அறநிலை துறையின் முடிவுக்கு உட்பட்டது.
ஊழைப் பற்றி அமித்ஷா பேசலாமா?, ரூ.3200 கோடி தேர்தல் நிதி எப்படி பா.ஜ.க-விற்கு வந்தது என்று அமித்ஷாவால் சொல்ல முடியுமா? தேர்தல் நெருங்க நெருங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா பந்துகளையும் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவும் 6 பந்துகள் போட வேண்டிய இடத்தில் 8, 10 என்று நோபால் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எங்கள் வெற்றியைத் தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நீலப்பொருளாதாரத்தில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மாநிலங்களவை தேர்தல் : வெளியானது தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்!
-
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!