Tamilnadu
கோவையில் 11,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் : புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
கோவையில் இன்று நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் சுமார் 11 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
குறிப்பாக, 1500 மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு வங்கி கடன் இணைப்புகள் - 1500 பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் - 211 மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள் வாகனம் மற்றும் செவித்திறன் கருவிகள் - கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஆணைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதோடு, ரூ.163 கோடி மதிப்பில் பணி நிறைவுபெற்ற திட்டங்களை திறந்து வைத்து, ரூ.32 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”திராவிட மாடல் அரசின் சீரிய திட்டங்களால், தமிழ்நாடு 11.19 % வளர்ச்சியுடன், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கியதன் மூலம் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்காக மற்றவர்கள் போராடிய சூழலை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் குரல் கொடுக்கும் அதிகாரத்தை திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது” என தெரிவித்தார்.
Also Read
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
-
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா?... : அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ.8 கோடியில் சாடியவல் யானைகள் முகாம் : திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர் : வீரபாண்டியன் கடும் கண்டனம்!