Tamilnadu
டிட்வா புயல் எச்சரிக்கை... நள்ளிரவில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக உருமாறியது. இலங்கைக்கு மிக அருகில் நிலைகொண்ட இந்த புயல் காரணமாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மிககனமழை பதிவானது. இதனால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்தது. இந்த புயல் தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே புயல் -கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் விதமாக நள்ளிரவில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஆய்வு செய்தார்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார். அவருடன் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரனும் உடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Also Read
-
”திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர திமுக ஆட்சி வேண்டும்” : சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
-
”ஓய்வின்றி உழைப்போம்.. திராவிட மாடல் 2.O ஆட்சி அமைப்போம்” : 75,000 BLA2-க்களுடன் முதலமைச்சர் பேச்சு!
-
எதிர்க்கட்சியினரை முடக்க சதி : செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை - முதலமைச்சர் கண்டனம்!
-
“ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்” : நடிகர் சத்யராஜ் கடும் தாக்கு!
-
தொகுதிமறுவரையறை - டெல்லியைத் தோற்கடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி!