Tamilnadu
”2026 தேர்தலில் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத்தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்தி வருகிறார். அதற்கு ஏன் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும். 2026 தேர்தலில் எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ரகுபதி,”தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்று சொன்னால் திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும். என்பதை இந்த நான்கு ஆண்டுகளில் நிரூபித்துள்ளோம். சொன்னதை செய்துள்ளோம், செய்வதை தான் சொல்லியுள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது கிடையாது.
பா.ஜ.கவின் C டீம்தான் விஜய்.இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். முன்பு ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள். இன்று அரசியல் களத்திற்கு வந்து இருக்கிறார்கள்.
தமிழர்களின் வரலாற்றையும், திராவிடத்தின் வரலாற்றையும் தற்போதுள்ள இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காக நாங்கள் அறிவுத் திருவிழாவை நடத்தினோம். இது பற்றி எல்லாம் சிலருக்கு புரிதல் கிடையாது. அவர்களது ஒரே எண்ணம் ஆட்சியை கைப்பற்றுவது. ஆட்சிக்கு வந்து உட்கார வேண்டும் என்பதுதான். அதை தவிர தமிழர்களைப் பற்றியோ தமிழர்களின் கொள்கையை பற்றியோ பண்பாட்டைப் பற்றியோ கலாச்சாரத்தை பற்றியோ அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது.
விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத்தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்தி வருகிறார். அதற்கு ஏன் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும். 2026 தேர்தலில் எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!