Tamilnadu
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டள்ளார். இதையடுத்து இதற்கான அரசாணையையும் தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
இதையடுத்து மருத்துவ பயனாளர்கள் என்று அழைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "ஏறி வந்து ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி. நோயாளிகளை மருத்துவப் பயனாளர்கள் என அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது. கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்று கூட சொல்ல தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்.
அ.தி.மு.க அமைப்பது வலுவான கூட்டணியா, நஞ்சு போன கூட்டணியா, தோல்வி கூட்டணியா என நான் ஜோசியம் சொல்ல முடியாது. ஆனால் தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது. 2026 தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி வருவதுபோல் 200 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் வெற்றிபெறுவோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!