Tamilnadu
அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல் : பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் கைது!
கோவை மாவட்டம், அன்னூர் அருகே கொங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாளார்கள் பணம் கேட்டு மிரட்டியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 2023 ம் ஆண்டு தனது மூத்த சகோதரர் விபத்தில் உயிரிழந்ததாகவும், அதனை விசாரிக்க வேண்டும் என கோகுல கண்ணன், சாமிநாதன் என்கிற ராஜராஜ சாமி மற்றும் ராசுக்குட்டி ஆகிய மூவர் விபத்து குறித்த வழக்கு பதிவு செய்து நிவாரணம் பெற்று தருவதாகவும், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை பயன்படுத்தியதால் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் ரூபாய் 10 லட்சம் பணம் தரும்படியும் அவ்வாறு தராவிட்டால், கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்ததாகவும், தற்போது மீண்டும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சாமிநாதன், ராஜேஷ், கோகுலகண்ணன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!