Tamilnadu
அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல் : பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் கைது!
கோவை மாவட்டம், அன்னூர் அருகே கொங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாளார்கள் பணம் கேட்டு மிரட்டியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 2023 ம் ஆண்டு தனது மூத்த சகோதரர் விபத்தில் உயிரிழந்ததாகவும், அதனை விசாரிக்க வேண்டும் என கோகுல கண்ணன், சாமிநாதன் என்கிற ராஜராஜ சாமி மற்றும் ராசுக்குட்டி ஆகிய மூவர் விபத்து குறித்த வழக்கு பதிவு செய்து நிவாரணம் பெற்று தருவதாகவும், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை பயன்படுத்தியதால் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் ரூபாய் 10 லட்சம் பணம் தரும்படியும் அவ்வாறு தராவிட்டால், கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்ததாகவும், தற்போது மீண்டும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சாமிநாதன், ராஜேஷ், கோகுலகண்ணன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!