Tamilnadu
நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு : த.வெ.க தொண்டர் காவல்துறையில் கொடுத்த புகார் என்ன?
அண்மையில் மதுரையில் த.வெ.க மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற விஜய், பொதுமேடைக்கு எதிர அமைக்கப்பட்டிருந்த நடைமுறையில் நடந்து சென்றார்.
அப்போது, தொண்டர்கள் பலரும் மேடைமீது ஏறி விஜய் அருகே செல்ல முயன்றபோது, கட்சி தொண்டர்கள் என்றும் பாராமல் அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை தூக்கி வீசினர். தொண்டர்களை கீழே தள்ளிவிட்டனர்.
இதை கண்ட தொண்டர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தனது தலைவர் அருகே கூட செல்ல விடாமல் ஏன் இப்படி தடுக்கிறார்கள் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் நிச்சயம் கோவமும் கேள்வியும் எழுந்து இருக்கும்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற தொண்டனும், விஜயை பார்க்கும் வேண்டும் என்ற ஆர்வத்தில் நடைமேடை மீது ஏறி அருகே சென்றார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தூக்கி வீசினர். இதில் அவர் மேடையில் இருந்து கீழே விழுந்தார்.
இந்நிலையில், விஜயின் பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த.வெ.க தொண்டர் சரத்குமார் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், நடிகர் விஜய் உள்ளிட்ட 10 பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!