Tamilnadu
”மக்களின் தீர்ப்பு திருட படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” : CM மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
பா.ஜ.க-வுக்கு சாதகமாக இந்தியர்களின் வாக்குகளை திருடி தேர்தல் ஆணையம் முறைகேடு செய்வதாக காங்கிரஸ் முன்னணித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்கு திருட்டு குறித்து சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. கர்நாடகா மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருட திட்டமிட்ட சதி.
வாக்குகள் திருடப்படுவது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ஆதாரங்கள், தேர்தல் ஆணையத்தின் மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் மின்னனு வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.
அரசியல் ரீதியாக இயக்கப்படும் நீக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நமது ஜனநாயகத்தின் இந்த நாசவேலை குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்.
வாக்குகள் திருட்டு குறித்து இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக தோளோடு தோள் நிற்கிறது. பா.ஜ.க பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்டோருக்கு திருவுருவச் சிலை! - நினைவு அரங்கம்! : முழு விவரம்!
-
திருப்பூரில் 61 புதிய திட்டப்பணிகள் திறப்பு! - ரூ.295.29 கோடியில் நலத்திட்ட உதவிகள்! : முழு விவரம் உள்ளே!
-
“திராவிட மாடல் 2.Oல் இதுவரை அடையாத புதிய உச்சத்தை தமிழ்நாடு அடையும்!” : திருப்பூரில் முதலமைச்சர் பேருரை!
-
ராகுல் காந்தி கைது : இந்தியா கூட்டணி எம்.பிக்கள் பேரணி - பரபரப்பான டெல்லி!
-
”தேர்தல் ஆணையத்தின் நோக்கம் ஆபத்தானது” : பொருளாதார மேதை அமர்த்தியா சென் கருத்து!