Tamilnadu
”பா.ஜ.க. புகுந்தால் தமிழ்நாடே நாசமாகிவிடும்” : ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை!
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, நிதிப் பகிர்வில் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சனை செய்கிறது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் ஒன்றிய ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ப.சிதம்பரம், ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியல் சாசனப்படி ஆட்சி செய்யவில்லை என்று விமர்சித்தார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து, நாடாளுமன்றத்தைக் கூட்டி ஒன்றிய அரசு ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டணி ஆட்சி தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்குள் சர்ச்சை எழுந்துள்ளதாக குறிப்பிட்ட ப.சிதம்பரம், தமிழ்நாட்டிற்குள் பாஜக புகுந்தால் தமிழ்நாடே நாசமாகிவிடும் என்று தெரிவித்தார்.
Also Read
-
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம் ஆனால்… பாகிஸ்தானின் முடிவுதான் என்ன!
-
உங்களின் Favourite Destination தமிழ்நாடு : உலக மக்களுக்கு முதலமைச்சர் சொன்ன வேண்டுகோள்!
-
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன யோக்கியதை உண்டு? : பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நினைவூட்டிய முரசொலி!
-
“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் மதவாதத்தை வீழ்த்தும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!