Tamilnadu
”பா.ஜ.க. புகுந்தால் தமிழ்நாடே நாசமாகிவிடும்” : ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை!
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, நிதிப் பகிர்வில் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சனை செய்கிறது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் ஒன்றிய ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ப.சிதம்பரம், ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியல் சாசனப்படி ஆட்சி செய்யவில்லை என்று விமர்சித்தார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து, நாடாளுமன்றத்தைக் கூட்டி ஒன்றிய அரசு ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டணி ஆட்சி தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்குள் சர்ச்சை எழுந்துள்ளதாக குறிப்பிட்ட ப.சிதம்பரம், தமிழ்நாட்டிற்குள் பாஜக புகுந்தால் தமிழ்நாடே நாசமாகிவிடும் என்று தெரிவித்தார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!