Tamilnadu
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
நிதி நிறுவனங்கள் நடத்தி பல்லாயிரக்கணக்கான ரூபாய் மோசடிகளில் பல்வேறு நிதி நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. தமிழ்நாடு அரசு அந்த நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் மதுரையை தலைமை இடமாகக் கொண்ட நியூ மேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மோசடியினை செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், நிதி நிறுவன மோசடிகளில் ஈடுபட்டுபவர்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், நிதி நிறுவன மோசடி புகார்களில் விரைந்து முடிக்க தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நிதி நிறுவன மோசடிகளில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது. பல ஆண்டுகளாக நிதி நிறுவன மோசடிகளின் சிக்கி காத்திருக்க கூடியவர்களுக்கு அரசின் முன்னெடுப்புகளால் விரைவில் மீள வாய்ப்பு என்றும் நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்தது. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதிபதி அவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தார்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!