Tamilnadu
மாட்டிக்கிட்ட பங்கு.. ரத்த தானம் கொடுப்பது போல் நடித்த அதிமுக பெண் நிர்வாகி.. வீடியோவில் சிக்கிய பின்னணி?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு அதிமுகவினர் பலரும் பல விஷயங்களை செய்து வரும் முனைப்பில் இருக்கின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை மத்திய மாவட்டத்தில் அதிமுக சார்பில் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமை திருவண்ணாமலை அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா தொடங்கி வைத்தார்.
அப்போது இரத்த தானம் கொடுப்பதற்காக சென்ற அவர், இரத்தம் கொடுக்காமல் இரத்தம் கொடுப்பதுபோல் கையை மட்டும் காண்பித்தபடி இருந்த ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படத்தை அதிமுக ஐடி விங்கும் பகிர்ந்து "இரத்த தான முகாமில் மாவட்டக் கழகச் செயலாளர், L.ஜெயசுதா அவர்கள் இரத்த தானம் செய்தார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதாவின் இந்த நடிப்பு குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு தற்போது பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!