Tamilnadu
12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு : தேர்வு முடிவு தேதி வெளியீடு!
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இப்பணி அண்மையில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை https://resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் பள்ளியிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல் பள்ளியில் மாணவர்கள் கொடுத்து இருக்கும் கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்து வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
Also Read
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!