Tamilnadu
12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு : தேர்வு முடிவு தேதி வெளியீடு!
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இப்பணி அண்மையில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை https://resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் பள்ளியிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல் பள்ளியில் மாணவர்கள் கொடுத்து இருக்கும் கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்து வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
Also Read
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!