Tamilnadu
சென்னையின் புதிய பெருமை - Renault நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு கூடம் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. மின்னணு உற்பத்தியில், தமிழ்நாடு அடைந்திருக்கிற வளர்ச்சி, நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஃபிரான்சு நாட்டின் Renault நிறுவனம் தமிழ்நாட்டில் மாபெரும் வடிவமைப்பு கூடத்தை அமைத்துள்ளது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.
இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “உலக நாடுகளுக்கான பிரெஞ்சு கார்களை வடிவமைக்கும் நகரம் என்ற புதிய பெருமையைப் பெற்றுள்ளது நம் சென்னை!
Renault நிறுவனம், ஃபிரான்சுக்கு வெளியே, தங்களது மிகப்பெரிய வடிவமைப்புக் கூடத்தை தற்போது சென்னையில் திறந்துள்ளது.
இத்தகைய கூடங்கள் தமிழ்நாட்டை உலகத் தரத்திலான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் நவீன ஆட்டோ தொழில்நுட்பங்களுக்கான மையமாக மாற்றும் ஒரு தெளிவான முன்னேற்றக் குறியீடுகளாக அமைகின்றன.
இந்த மையம் Renault-ன் ‘renault.rethink’ முழுமையான புதிய தொலைநோக்கிலான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். இது இந்திய "மார்க்கெட்" பற்றிய அவர்களின் நீண்டகால நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் வலியுறுத்துகிறது.
உலகின் முன்னணி கார் உற்பத்தி மையமாக உள்ள தமிழ்நாடு, இப்போது வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் உயர் நுட்ப பொறியியல் சேவைகளுக்கான சக்திவாய்ந்த மையமாகவும் உயர்ந்து வருகிறது. இது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் வளர்ச்சி. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு!” என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!