Tamilnadu
பனிமூட்டம் : கொடைக்கானலாக மாறிய சென்னை!
சென்னையில் கடந்த நில நாட்களாகவே அதிகாலையில் பனிமூட்டம் இருந்து வருகிறது.ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கடும் பனிமூட்டம் நிலவியது. 10 அடி தூரத்திற்கே எதுவும் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது.
சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பனிமூட்டம் இருந்தது. திடீரென சென்னை கொடைக்கானல் போல் காட்சியளித்தது. இப்பனிமூட்டம் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
மேலும், பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது. அதேபோல் ரயில் வேவைகளும் பாதிக்கப்பட்டது.
Also Read
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!