Tamilnadu
பனிமூட்டம் : கொடைக்கானலாக மாறிய சென்னை!
சென்னையில் கடந்த நில நாட்களாகவே அதிகாலையில் பனிமூட்டம் இருந்து வருகிறது.ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கடும் பனிமூட்டம் நிலவியது. 10 அடி தூரத்திற்கே எதுவும் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது.
சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பனிமூட்டம் இருந்தது. திடீரென சென்னை கொடைக்கானல் போல் காட்சியளித்தது. இப்பனிமூட்டம் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
மேலும், பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது. அதேபோல் ரயில் வேவைகளும் பாதிக்கப்பட்டது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!