Tamilnadu
பனிமூட்டம் : கொடைக்கானலாக மாறிய சென்னை!
சென்னையில் கடந்த நில நாட்களாகவே அதிகாலையில் பனிமூட்டம் இருந்து வருகிறது.ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கடும் பனிமூட்டம் நிலவியது. 10 அடி தூரத்திற்கே எதுவும் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது.
சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பனிமூட்டம் இருந்தது. திடீரென சென்னை கொடைக்கானல் போல் காட்சியளித்தது. இப்பனிமூட்டம் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
மேலும், பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது. அதேபோல் ரயில் வேவைகளும் பாதிக்கப்பட்டது.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !