Tamilnadu
பனிமூட்டம் : கொடைக்கானலாக மாறிய சென்னை!
சென்னையில் கடந்த நில நாட்களாகவே அதிகாலையில் பனிமூட்டம் இருந்து வருகிறது.ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கடும் பனிமூட்டம் நிலவியது. 10 அடி தூரத்திற்கே எதுவும் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது.
சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பனிமூட்டம் இருந்தது. திடீரென சென்னை கொடைக்கானல் போல் காட்சியளித்தது. இப்பனிமூட்டம் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
மேலும், பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது. அதேபோல் ரயில் வேவைகளும் பாதிக்கப்பட்டது.
Also Read
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!
-
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“சென்னையில் ஓமந்தூர் ராமாசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா? : பழனிசாமிக்கு அமைச்சர் MRK கேள்வி!